ஜம்மு -காஷ்மீரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்கியதில் 3 பேர் காயம்

ஜம்மு -காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள மெயின் சவுக் என்ற இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கர வாதிகள் போலீசார் மீது கையெறி குண்டுகளை வீசினர்.

இந்த தாக்குதலில் மூன்று பொதுமக்கள் காயமடைந்தனர். காயமடைந்த மூவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் தாக்குதல் நடத்திய பயங்கர வாதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!