பாதுகாப்பு படையினரால் காஷ்மிரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

காஷ்மிரின் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அதிகாலை (நவம்பர் 11) அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். கப்ரீன் பகுதியில் சோதனை நடத்தியபோது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடவும், அதிரடிப்படையினர் பதில்…

கனமழை எதிரொலி: தட்டச்சு தேர்வு ஒத்திவைப்பு

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று (நவம்பர் 11) அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 25 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக நாளை, நாளை மறுநாள் நடைபெற இருந்த தட்டச்சு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.…

அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு

தமிழ்நாட்டில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மாற்றுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனப் பதிவாளர் குறிப்பிட்டுள்ளார். தேர்வுக்கு…

சென்னை உள்ளிட்ட நகரங்களில் 5G சோதனை- ஜியோவின் ப்ளான்

ரிலையன்ஸ் ஜியோ 5G நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதாகவும், பெங்களூரு மற்றும் ஐதராபாத்தில் சேவையை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. சென்னை உட்பட 6 நகரங்களில் பீட்டா சோதனை தொடங்கப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் ரூ.88,000 கோடி செலவழித்து 700 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ், 3300…

சென்னை வெள்ள பாதிப்புகள் குறித்து மேயர் பிரியா கருத்து

சென்னை வால்டாக் சாலையில் இருக்கும் குடியிருப்புகளுக்கான இலவச மருத்துவ முகாமை இந்துசமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா ராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, ”வெள்ள பாதிப்புகள் மற்றும் மழை நீர்…

இப்படி வெளிநாடு போனால் சிக்கிக் கொள்வீர்கள் – அமைச்சர் செஞ்சி மஸ்தான்

அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் மூலமாக மட்டுமே வெளிநாடு செல்ல வேண்டும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்த பேட்டியில், “போலி ஏஜென்டுகள் மூலமாக வெளிநாடு செல்வோர்தான் சிக்கித் தவிக்கின்றனர். நைஜீரியாவில் சிக்கியிருக்கும் தமிழர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. விரைவில்…

அவர்களால் நிலையான ஆட்சி கொடுக்க முடியாது – பிரதமர் மோடி

இமாச்சல பிரதேசத்தில் பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அதில், “காங்கிரஸ் கட்சியால் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு ஒரு நிலையான ஆட்சியைக் கொடுக்க முடியாது. அவர்களும் அதை விரும்பவில்லை. ஒன்றியத்திலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால்…

வேலை வாய்ப்பு குறித்த அரசாணை 115 ரத்து – முதல்வர் ஸ்டாலின்

குறுகிய கால பணியிடங்களை தனியார் ஏஜென்சி மூலம் நிரப்புவது குறித்த அரசாணை எண் 115ஐ நிறுத்திவைப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தனியார் ஏஜென்சி மூலம் நிரப்பும் முறை, அரசு பணிகளில் நிரந்தர வேலைவாய்ப்பையும், சமூகநீதியையும் பறித்துவிடும் அபாயம் உள்ளதால், அரசாணை 115ன்…

சமூக நீதி கொள்கைகள் – புதிய சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசு திட்டம்

அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் நோக்கம். இதற்காக சட்டம் இயற்ற திட்டமிட்டுள்ள அரசு, அதற்கான வரைவை உருவாக்க வல்லுநர் குழுவை அமைத்துள்ளது. அதில், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் அமித்…

காங்கிரஸுக்கு மக்களைப் பற்றிய கவலை இல்லை – யோகி ஆதித்யநாத்

இமாச்சல் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரத்தின்போது பேசிய உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “காங்கிரஸ் கட்சி ஒரு குடும்ப கட்சியாகவே மாறிவிட்டது. நாட்டின் பாதுகாப்பையும் மக்களின் உணர்வுகளையும் பற்றி அவர்களுக்கு எந்த…

Translate »
error: Content is protected !!