10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு

 

கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டு 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு திருப்புதல் தேர்வு அடிப்படையில் நடைபெறவுள்ளது.

இந்தநிலையில், பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் அத்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.

கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார்,  தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.  மேலும்  பிளஸ் 2 கணித  திருப்புதல் தேர்வு இன்று நடைபெறவிருந்த நிலையில், அதன் வினாத்தாள் வலைதளங்களில்   கசிந்தது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ், பிளஸ் 2 கணித திருப்புதல் தேர்வில், கசிந்த வினாத்தாளில் இடம்பெற்ற கேள்விகள் இடம்பெறாது என தெளிவுப்படுத்தினார்.

 

Translate »
error: Content is protected !!