டெல்லியில் 240 அரசுப்பள்ளிகளில் 12 ஆயிரத்து 430 ஸ்மார்ட் வகுப்பறைகள்

கடந்த 7 ஆண்டுகளில் தலைநகர் டெல்லியில் 20 ஆயிரம் புதிய வகுப்பறைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் 240 அரசுப்பள்ளிகளில் 12 ஆயிரத்து 430 ஸ்மார்ட் வகுப்பறைகளை தொடங்கிவைத்து பேசிய அவர், அம்பேத்கரின் கனவை நனவாக்க தொடங்கியிருக்கும் ஒரே மாநிலம் டெல்லிதான் என்று கூறினார் .கடந்த 7 ஆண்டுகளில் நாடு முழுவதும் பள்ளிகளில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகளை காட்டிலும் டெல்லியில் கட்டியிருக்கும் புதிய வகுப்பறைகளின் எண்ணிக்கை அதிகம் என்று தெரிவித்தார். நல்ல பள்ளிகளை கட்டினால் சாதி, மதத்தின் பெயரால் தங்களுக்கு வாக்கு கிடைக்காது என்பதால் அரசியல் தலைவர்கள் பள்ளிகளைக் கண்டு அச்சமடைவதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!