ராயப்பேட்டை பகுதியில் 20 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல்

 

சென்னை ராயப்பேட்டை பகுதியில் சாலையில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபர்களிடம் சோதனை மேற்கொண்டபோது 20 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராயப்பேட்டை காவல் எல்லைக்குட்பட்ட கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் அருகே அதிக பணத்துடன் சந்தேகத்திற்கிடமாக இரண்டு நபர்கள் நின்று இருப்பதாக ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த முதல் நிலை காவலர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராயப்பேட்டை காவல்துறையினர் அங்கிருந்த இரண்டு பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் வைத்திருந்த பையினுள் 20 லட்சம் ரூபாய்  இருப்பது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரத்தில் அதிக அளவிலான பணத்தை வைத்து உலாவந்த நபர்களிடம் பிடிபட்ட பணம் ஹவாலா பணமா அல்லது வேறு ஏதேனும் பணமா  என்பது குறித்து ராயப்பேட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!