மான் வேட்டையாடிய 3 பேர் கைது

 

நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பக வனப்பகுதியில், வேட்டைநாய்களை கொண்டு மான் வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களக்காடு வனப்பகுதியில், புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, 4 பேர் வேட்டை நாய்களை கொண்டு கடமானை வேட்டையாடி, இறைச்சியை வெட்டிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்களை மடக்கி பிடிக்க முயன்ற போது, ஒருவர் தப்பியோடிய நிலையில், புதுக்குடியை சேர்ந்த ஆறுமுகம், ஸ்டாலின் மற்றும் குமார் ஆகிய மூவரை கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்கள், ஆயுதங்கள் மற்றும் 80 கிலோ மான் இறைச்சி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய முருகன் என்பவரை தேடி வருகின்றனர்.

 

 

Translate »
error: Content is protected !!