300கிலோ ஹெராய்ன் கடத்திய வழக்கு – பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்பகுதியில் கடந்தாண்டு கடத்திவரப்பட்ட 300 கிலோ ஹெராய்ன் ஐந்து ஏகே 47 துப்பாக்கிகள், ஆயிரம் தோட்டாக்கள் ஆகியவை கடலோர பாதுகாப்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தி வந்த இலங்கையை சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த ஆண்டு மே மாதம் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்திய நிலையில் சுரேஷ், சௌந்தர்ராஜன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சென்னை உட்பட பல மாவட்டங்களில் நடத்திய சோதனையில் சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த சத்குணம் என்கிற சபேசன் இலங்கைத் தமிழர் கைது செய்யப்பட்டார்.

இவரிடமிருந்து விடுதலை புலிகள் இயக்கம் தொடர்பான பல்வேறு ஆவணங்கள், சிம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சென்னையில் 9 இடங்கள் மற்றும் திருச்சியில் 11 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!