உத்தரபிரதேசத்தில் இன்று 3ம் கட்ட வாக்குப்பதிவு

உத்தரபிரதேசத்தில், சமாஜ்வாடி கட்சி ஆதிக்கம் செலுத்தும் 59 தொகுதிகளில் இன்று 3ம் கட்ட வாக்குப்பதிவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. 403 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேசத்தில், 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று 3ஆம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதலே வாக்குச்சாவடிகள் முன் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். முதல்முறை வாக்காளர்களும் ஆர்வமுடன் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். ஒரு சில இடங்களில் இயந்திர கோளாறு காரணமாக நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு, வாக்குப்பதிவு இயந்திரம் சரிசெய்த பின் மீண்டும் தொடங்கியது.

 

Translate »
error: Content is protected !!