அஸ்ஸாம் வெள்ளத்திற்கு 51 லட்சம் வழங்க இருக்கும்….

அசாம் வெள்ள நிவாரணத்திற்கு 51 லட்ச ரூபாய் வழங்க இருப்பதாக, சிவசேனா அதிருப்தி அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். சிவசேனா கட்சி தலைமையின் மீதுள்ள அதிருப்தியால், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கவுஹாத்தியில் முகாமிட்ட ஏக்நாத் ஷிண்டே, நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனிடையே அவர்கள் கவுஹாத்தியில் தங்கியிருந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் அசாம் மக்களுக்கு உதவுவதற்காக, அம்மாநில முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு 51 லட்ச ரூபாய்யை அளிக்க முடிவெடுத்துள்ளதாக ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!