80% நிறைவேற்றப்பட்ட திமுக தேர்தல் வாக்குறுதிகள் – முதலமைச்சர் பெருமிதம்

 

திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் 80% நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 சதவீதமும் விரைவில் நிறைவேற்றப்படும். திமுக ஆறாவது முறையாக ஆட்சி அமைக்க திமுகவின் தொண்டர்களே காரணம் என முதலமைச்சர் பெருமிதம்.

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை ஒட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் மூத்த முன்னோடிகள் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர்  மேற்கு மாவட்ட சேர்ந்த திமுகவின் மூத்த நிர்வாகிகள் 500 பேருக்கு தலா பத்தாயிரம்  மற்றும் புத்தாடை வழங்கப்பட்டது. அப்போது மேடையில் பேசிய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பேச்சு:

”கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்தாலும் ஆட்சியில் இல்லை என்றாலும் மக்களுக்காக போராடியவர்.பல்வேறு சாதனைகளை செய்தவர். அத்தகைய தலைவருடைய பிறந்தநாள் கொண்டாடுகிறோம் என்று சொன்னால் அது  திமுகவினருக்கு கிடைக்கக்கூடிய பெருமை.  கருணாநிதி தான் திமுகவின் வேர் தமிழ்நாட்டின் வேர். இந்தப் பொற்கிழி வழங்க கூடிய நிகழ்ச்சி என்பது ஏதோ நீங்கள் செய்த பணிகளுக்கான பரிகாரம் என்று எண்ணக்கூடாது. நீங்கள் செய்யும் பணிக்கு ஈடு இணை எதுவுமே கிடையாது என்ன கொடுத்தாலும் ஈடாகாது அப்படிப்பட்ட பணியை மூத்த நிர்வாகிகள் திமுகவில் செய்து வருகின்றனர்.

திமுக ஆறாவது முறையாக தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்து இருக்கிறார் என்று சொன்னால் அதற்கு காரணம் மூத்த நிர்வாகிகள் தான்.  இன்று நான் முதலமைச்சராக இருக்கிறேன் மற்றவர்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்று சொன்னால் அதற்கு காரணம் உங்களைப் போன்ற மூத்த முன்னோடிகள் தான் அதனால் உங்களை ஊக்கப்படுத்த கூடிய வகையில் தான் இந்த பொற்கிழி வழங்கக்கூடிய நிகழ்ச்சி. திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் 80% நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 சதவீதமும் விரைவில் நிறைவேற்றப்படும்” என கூறினார்.

 

Translate »
error: Content is protected !!