தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் நேற்று மேலும் ஆயிரத்து 669 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. அதன்படி, நேற்று ஒர நாளில், ஆயிரத்து 669 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 42 ஆயிரத்து 30 ஆக உயர்ந்துள்ளது. எனினும் நேற்று தமிழகத்தில்  தொற்று பாதிப்பில் இருந்து ஆயிரத்து 565 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் நேற்று மேலும் 196 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!