விமானப்படை தலைமை தளபதியாக வி.ஆர்.சவுத்ரியை நியமனம்…

இந்திய விமானப்படையின் புதிய தலைமை தளபதியாக வி.ஆர்.சவுத்ரியை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.

இந்திய விமானப்படையின் தலைமை தளபதியாக ராகேஷ் குமார் சிங் பதவுரியா நீடித்து வரும் நிலையில் அவர் வருகிற செப்டம்பர் 30ம் தேதியுடன் அவர் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அவரது இடத்திற்கு புதிதாக ஏர் மார்ஷர் விவேக் ராம் சவுத்ரியை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் நியமனம் செய்துள்ளது. தொடர்ந்து விமானப்படையின் துணை தளபதியாக இருந்த இவர், பரம் விசிஷ்ட சேவா, ஆதி விசிஷ்ட சேவா, வாயு சேனா உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்றுள்ளார். இந்த நிலையில், விமானப்படையின் புதிய தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள வி.ஆர்.சவுத்ரி மிக்- 29 ரக போர் விமானங்களை இயக்குவதில் வல்லுநர் எனவும் கூறப்படுகிறது.

Translate »
error: Content is protected !!