3-வது மெகா தடுப்பூசி மையம்…வெறிச்சோடி காணப்படும் மையங்கள்…

தமிழகம் முழுவதும் இன்று மூன்றாவது முறையாக 20 மெகா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் மூன்றாவது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் நிலையில், இதற்காக இன்று தமிழகம் முழுவதும் 20ஆயிரம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 1600 தடுப்பூசி மையங்களில் இன்று மட்டும் 15 லட்சம் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் காலையில் இருந்தே தடுப்பூசி மையங்கள் பொதுமக்களின் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

பொதுமக்களின் வசதிக்காக பேருந்து நிலையம், ரயில் நிலையம், மருத்துவமனைகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!