மாநிலங்ளில் வறட்சி நிலவுகிறது- மன் கி பாத்தில் பேச்சு

ஆறுகளில் போதிய நீர் வரத்து இல்லாததால், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்ளில் வறட்சி நிலவுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மன் கி பாத் என்ற மனதின் குரல் நிகழ்ச்சி மூலம், பிரதமர் மோடி ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்று கிழமைகளில் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். அந்தவகையில் 81வது மன் கி பாத் நிகழ்வான இன்று, ஆறுகளின் சிறப்பம்சங்களை எடுத்துரைத்து பேசினார். அப்போது சர்வதேச ஆறுகள் தினமான இன்று, ஆறுகளை தூய்மையாக பேணி பாதுகாக்க உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தனக்கு கிடைக்கும் பரிசு பொருட்கள் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுவதை குறிப்பிட்ட அவர், அப்பணத்தில் கங்கை நிதியை தூய்மைப்படுத்தவும், அதுசார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவும் உள்ளதாக கூறினார்.

Translate »
error: Content is protected !!