1-ம் தேதி முதல் பள்ளிகள் செயல்படாது என்பது தவறான தகவல்…பள்ளிக்கல்வித்துறை

தமிழகத்தில் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என்பது தவறான தகவல் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. எனினும் பள்ளிகள் திறக்கப்பட்ட நாள் முதல் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும், போதிய முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதனிடையே வரும் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால் இந்த தகவல் முற்றிலும் தவறானது என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!