குழம்பிய குட்டைக்குள் மீன் பிடிக்க பாகிஸ்தான் முயற்சிக்கும்- காங். எம்.பி. 

குழம்பிய குட்டைக்குள் மீன் பிடிக்க பாகிஸ்தான் முயற்சிக்கும் என காங்கிரஸ் எம்.பி.  மணீஷ் திவாரி எச்சரிக்கை விடுத்துள்ளார் .

பஞ்சாப் காங்கிரஸில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் திருப்பங்கள், கட்சி தலைவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.  பஞ்சாப் அரசியல் குறித்து பேசிய மணிஷ் திவாரி, தீவிரவாதம், பயங்கரவாதத்தை ஒழித்து பஞ்சாபில் அமைதியை நிலைநாட்ட, சுமார் 25 ஆயிரம் காங்கிரசார் உயிர் தியாகம் செய்ததாக குறிப்பிட்டார். தற்போது அங்கு விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட சமூக பிரச்னைகளும் நிலவுவதாக கூறிய அவர்,   இதுபோன்ற சூழலில் உள்கட்சி பிரச்னை, அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

பஞ்சாபின் தற்போதைய நிலை கவலை அளிப்பதாகவும்  கூறினார். பஞ்சாப் போன்ற எல்லை மாநிலங்களில் அமைதி, ஸ்திரத்தன்மை மிகவும் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!