“கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்” – ரூ.3.85 கோடி ஒதுக்கீட்டின் அரசாணை வெளியீடு

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்திற்காக 3 புள்ளி 85 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடைபெறும் முகாம்களிலும் தடுப்பூசி செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் தமிழ்நாடு முழுவதும்  இந்த திட்டத்தின் கீழ் 1155 முகாம்கள் அமைக்க ரூ.3.85 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் என்னென்ன சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்ற விவரங்களையும் அரசு வெளியிட்ட நிலையில், ஒரு வட்டாரத்தில் 3 முகாம்கள் அமைக்கப்படும் – 385 வட்டாரங்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் ரூ.3.85 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!