தடுப்பூசி போடாதவர்களே கொரோனாவால் பலியாகிறார்கள்…

கொரோனாவால் பலியாகும் 90 சதவீதம் பேர் தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் தான் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,இன்று தமிழகம் முழுவதும் 24 ஆயிரத்து 760 மையங்கள் மற்றும் சென்னையில் ஆயிரத்து 600 இடங்களிலும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

கொரோனா இறப்பில் 90 சதவீத உயிரிழப்பு தடுப்பூசி செலுத்தாதவர்கள்தான் என்றார்.

Translate »
error: Content is protected !!