தொடர்ந்து முன்னிலை வகிக்கும் மே.வங்க முதல்வர் மம்தா…

மேற்கு வங்கத்தில் பபானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடக்கத்ஹ்டில் இருந்தே முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலை வகித்து வருகிறார்.

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்ற போதிலும்,  மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். எனினும் 6 மாதத்திற்குள் அவர் சட்டசபை உறுப்பினராக வேண்டும் என்பதால் பபானிபூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பபானிபூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார்.

தற்போது பபானிபூர் உள்ளிட்ட 3 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் 21 சுற்றுகளாக காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே மம்தா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருவதால், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளளனர்.

 

Translate »
error: Content is protected !!