கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தியதில் தமிழகம் முதலிடம்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கர்ப்பிணிகளுக்கு அதிகளவில் தடுப்பூசி செலுத்தப்படுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரை பகுதியில்,  நரிக்குறவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை மக்கள்நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில், இதுவரை 5 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்து 633 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கூறினார். தடுப்பூசி செலுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி முதல் இடத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் தான், கர்ப்பிணிகளுக்கு அதிகப்படியாக 4 லட்சத்து 80 ஆயிரத்து 875 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

Translate »
error: Content is protected !!