தொழிற்துறையில் புத்துணர்சி- ஸ்டாலின் பெருமிதம்

திமுக ஆட்சியமைந்த கடந்த 4 மாதங்களில் தமிழ்நாடு தொழிற்துறையில் புத்துணர்சி பெற்றுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ட்ரில்லயன் டாலர் தமிழ்நாடு கருத்தரங்கில், டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் மெர்சன்ட்ஸ் ஆப் மெட்ராஸ் வணிக பிரதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், உலகின் அதிகம் வாசிக்கக்கூடிய நாளிதழாக டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளது என்றார்.

மேலும் அனைத்து தொழில்களும் தொடங்குவதற்கான சூழல் தமிழகத்தில் நிலவுவதாக தெரிவித்த முதலமைச்சர், அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிகாக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாக கூறினார். மேலும் திமுக ஆட்சியமைந்த கடந்த 4 மாதங்களில் தமிழ்நாடு தொழிற்துறையில் புத்துணர்வு அடைந்துள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்

Translate »
error: Content is protected !!