ஆயுதபூஜை: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

ஆயுதபூஜை, சரஸ்வதி பண்டிகையால் தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர் செல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜையும், நாளை விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. வரும் சனி மற்றும் ஞாயிறுக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதால், 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனையொட்டி சென்னையில் வசிக்கும் வெளியூர்வாசிகள், சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பயணிகள் வசதிக்காக சென்னையில் கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் ஆகிய 3 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

Translate »
error: Content is protected !!