முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கிற்கு டெங்கு காய்ச்சல்…

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கிற்கு டெங்கு காய்சசல் ஏற்பட்டுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் காய்ச்சல் மற்றும் உடல்சோர்வு காரணமாக கடந்த 13-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னார் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விலையில் அவருக்கு டெங்கு காய்சசல் இருப்பதாக மருத்துவனை விரிவாக்கம் தெரிவித்துள்ளது.
அவரது உடலில் ரத்தத் தட்டுக்கள் மெல்ல அதிகரித்து வருவதாகவும், அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மன்மோகன் சிங், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!