கனமழை எதிரொலி- சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கனமழை கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி வனப்பகுதியில் அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை மற்றும் காட்டு நீருற்று ஓடைகளில் இன்று பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வனத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் யாரும் அருவி பகுதிக்கு செல்லாதவாறு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கொரானா தடைக்காலம் என்பதால் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அருவியில் குளிப்பதற்கு தடை விதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

Translate »
error: Content is protected !!