தொகுதிக்கு என்ன செஞ்சீங்க என கேள்வி கேட்ட இளைஞர் – ஆத்திரத்தில் அறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ

பஞ்சாபில் நடைபெற்ற பொதுக்ககூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட எம்எல்ஏவிடம் தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்பிய இளைஞரை அந்த எம்எல்ஏ சரமாரியாக அறைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம், பதான்கோட் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்எல்ஏ ஜோஜிந்தர் பால் பங்கேற்றார். பின்னர் தொகுதிக்காக அவர் கொண்டு வந்த திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் அவர் பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் தொகுதிக்கு உண்மையா நீங்கள் என்ன செய்யீதர்கள் என கேள்வி எழுப்பினார்.

இதில் ஆத்திரமடைந்த எம்எல்ஏ, இளைஞரின் கன்னத்தில் பலார் என அறைந்து சரமாரியாக தாக்கினார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.

Translate »
error: Content is protected !!