சென்னையில் நள்ளிரவு மிதமான மழை…! – மக்கள் மகிழ்ச்சி

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இரவில் விட்டு விட்டு மழை பெய்தது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்த நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை விட்டு விட்டு  பெய்தது.

சென்னையில் அடையார்,  திருவான்மியூர், கிண்டி, கோயம்பேடு, வடபழனி, கோடம்பாக்கம், பட்டினம்பாக்கம் ஆகிய இடங்களில் இரவில் விட்டு விட்டு மழை பெய்தது.

Translate »
error: Content is protected !!