தமிழகர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை – வழக்கு ஒத்திவைப்பு

தமிழகர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் விதமாக, தமிழக அரசு அரசாணையை பிறப்பிக்கக் கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்துள்ளது.

திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த சோழசூரர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், தமிழக மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் விதமாக, சட்டம் அல்லது அரசாணையை தமிழக அரசு பிறப்பிக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனை விசாரித்த நீதிபதிகள், குறிப்பிட்ட மாநிலத்தினருக்கு பணியில் முன்னுரிமை என கூறுவது சட்டவிரோதம் ஆகாதா? என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த மனுதாரர், பல மாநிலங்களில் இதுபோல அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை நவம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Translate »
error: Content is protected !!