மாஸ்க் போடலைனா அபராதம் செலுத்தனும்…

சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் கட்டாயம் அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை  மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், மக்கள் அதிகமாக கூடும் வணிக பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பு, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

புரசைவாக்கம் பகுதியில் உள்ள கடைகளுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்ட அவர்கள், முகக்கவசம் அணியாத பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி முகக்கவசம் அணிய வைத்தனர். முகக் கவசம் அணிந்து வந்த குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கியும் ஊக்குவித்தனர்.

Translate »
error: Content is protected !!