இலங்கை தமிழர்களின் நலனுக்காக அரசாணை

இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனை குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்

ஆலோசனைக்குழு முகாம்களில் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், கல்வி மற்றும் சமூக பாதுகாப்பிற்கு உதவிக்கு வகை செய்தல், குடியுரிமை மற்றும் இலங்கைக்கு விரும்பி செல்லுதல் ஆகிய 3 அம்சங்களை உள்ளடக்கி செயல்படும் என்றும் சிறுபான்மையினர் நலன் துறை அமைச்சர் மஸ்தான் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி துணைத்தலைவராகவும், மனுராஜ் சண்முகசுந்தரம் உள்ளடக்கிய 20 பேர் கொண்ட குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!