பார்கள் திறக்க அனுமதி- வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியீடு

நவம்பர் 1ம் தேதி முதல் பார்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால் அதற்கான நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, பார்களின் நுழைவாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்பே பார்களுக்கு உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பணியாளர்கள் கூடுதல் கையுறைகள் பயன்படுத்துவதோடு, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் கூடுவது தடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!