நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை

புதுச்சேரியில் பெய்து வரும் கனமழை காரணமாக நாளை மற்றும் நாளை மறுதினம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதிதாக உருவாகியுள்ள புயல் காரணமாக மேலும் இரண்டு தினங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்றும், மேலும் புதுச்சேரிக்கு ரெட் அலார்ட் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (10-11-2021) மற்றும் நாளை மறுதினம் (11-11-2021) என மேலும் இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!