ராமநாதபுரம், நாகை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை ,நாகை உள்ளிட்ட கடற்கரையோர மாவட்டங்கள் கடும் வெள்ளத்தில் சிக்கியது.

இந்த நிலையில் தற்போது மழை ஒய்ந்திருக்கும் நிலையில் தமிழகத்தில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம் , நாகை ஆகிய மாவட்டங்களில் மிக கன மழை பெய்யக்கூடும் என்றும், தென்காசி, நெல்லை , தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நவம்பர் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் சென்னைக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Translate »
error: Content is protected !!