பச்சிளம் குழந்தை கொடூர கொலை – தாய் அதிரடி கைது

தஞ்சாவூர் மாவட்டத்தில் பச்சிளம் பெண் குழந்தை கழிவறையில் வைத்து கொல்லப்பட்ட விவகாரத்தில் குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.  சில தினங்களுக்கு முன், தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கழிவறை ஃபிளஷ் டேங்கில் பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் கைப்பற்றப்பட்டது.

காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அந்த குழந்தையின் தாய், தஞ்சை பூதலூரை சேர்ந்த பிரியதர்ஷினி என்பது தெரியவந்தது. இந்நிலையில் குழந்தையின் தாய் பிரியதர்ஷினி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முறையற்ற உறவால் பிறந்த குழந்தை என்பதால் தாயே குழந்தையை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Translate »
error: Content is protected !!