ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் பள்ளிக்கு வந்த மாணவர்களை, ஆசிரியர்கள் பூக்கள் கொடுத்து வரவேற்பு

 

காரைக்காலில் ஒன்றரை  ஆண்டுகளுக்கு பின் பள்ளிக்கு வந்த ஒன்று முதல் 8ம் வகுப்பு மாணவர்களை, ஆசிரியர்கள் பூக்கள் கொடுத்து வரவேற்றனர். புதுச்சேரியில் கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து படிப்படியாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன.  கடந்த சில மாதங்களுக்கு முன் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்றிலிருந்து 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கியுள்ளது. காரைக்காலில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் பள்ளிக்கு  வந்த மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு பூக்களை வழங்கி ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வகுப்பு அறைகளிலும் கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!