இந்தியா உலகளாவிய அங்கீகாரம் பெற்றதாக புகழாரம்..

பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா உலகளாவிய அங்கீகாரம் பெற்றுள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் புகழாரம் சூட்டியுள்ளார்.

தேசிய வேளாண் மற்றும் உணவுப் பதப்படுத்துதல் உச்சி மாநாட்டின் நிறைவு அமர்வு குஜராத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் காணொலி வாயிலாக பங்கேற்றுள்ள பிரதமர் மோடி விவசாயிகளிடையே உரையாற்றவுள்ளார். முன்னதாக பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இந்தியா உலக அரங்கில் புறக்கணிக்கப்பட்ட காலம் இருந்ததாக குறிப்பிட்ட அவர், காந்தி மற்றும் படேலுக்குப் பிறகு, பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாகவும் புகழாரம் சூட்டினார். ஆனால் இன்று இந்தியாவின் ஒருமித்த கருத்தை உலக நாடுகள் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறினார்.

Translate »
error: Content is protected !!