பிரதமரை பின்பற்றும் சிவசேனா எம்.பி

பிரதமர் மோடியின் வழியை பின்பற்றியே தான் முககவசம் அணிவதில்லை என சிவசேனா மூத்த தலைவரும் எம்.பி-யுமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். சிவசேனா மூத்த தலைவரான சஞ்சய் ராவத் எம்.பி. நேற்று நாசிக்கில் நடந்த நிகழச்சியில் கலந்துகொண்டபோது முககவசம் அணியாமல் இருந்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், நாட்டு மக்களை பிரதமர் மோடி முக கவசம் அணிய வலியுறுத்தி வருவதாகவும் ஆனால் அவர் முககவசம் அணிவது இல்லை என்றும் குற்றம்சாட்டினார். மேலும் மகாராஷ்டிர முதல்வர் முக கவசம் அணிவதாக சுட்டிக்காட்டிய அவர், பிரதமர் மோடியின் வழியை பின்பற்றி தானும் முககவசம் அணிவதில்லை எனவும் பதிலளித்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!