பிரதமர் மோடி அடுக்காக பொய் சொல்கிறார்

பிரதமர் மோடியின் அடுக்கடுக்கான பொய்களை டெலிப்ராம்ப்டரால் (teleprompter) கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை என ராகுல் காந்தி கேலி செய்துள்ளார். சுவிட்சர்லாந்தின்  டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக உரை நிகழ்த்தினார்.  அப்போது இந்தியாவின் பொருளாதாரம் குறித்தும், நாடு முன்னேற்ற பாதையில் நடைபோட்டுக் கொண்டிருப்பது பற்றியும் மோடி உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பிரதமர் மோடியின் டெலிபிராம்ப்டர் செயலிழந்தது. இதனால் பிரதமர் மோடி தனது உரையை பாதியிலேயே நிறுத்த வேண்டியதாயிற்று. இந்த நிகழ்வு ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. இதனை கேலி செய்யும் விதமாக  ராகுல் தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்…

Translate »
error: Content is protected !!