முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனு

புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்குவதை கைவிடக்கோரி, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்துள்ளனர்.

புதுச்சேரி அரசின் மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், மத்திய அரசின் இந்த முடிவுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசின் நடவடிக்கையை கைவிடக்கோரி, புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான சிவா தலைமையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் நேற்று சட்டமன்ற அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்துள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!