5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி

 

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றது.இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், 5வது முறையாக இந்திய அணி வெற்றி பெற்று வரலாறு படைத்தது. இந்தநிலையில், வெற்றி பெற்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.  துணிச்சலுடன் கூடிய சிறப்பான ஆட்டத்தின் மூலம் கிரிக்கெட்டின் எதிர்காலம் திறமையானவர்களின் கைகளில் இருப்பதை  வீரர்கள் காட்டியிருப்பதாக மோடி தெரிவித்துள்ளார்…

Translate »
error: Content is protected !!