ஹிஜாப் அணிந்து சென்ற பெண் வாக்களிக்க எதிர்ப்பு

 

மதுரையில் ஹிஜாப் அணிந்து சென்ற பெண் வாக்களிக்க எதிர்ப்பு தெரிவித்த பாஜக முகவரை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

நேற்று நடைபெற்ற நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவின்போது மதுரை மேலூர் நகராட்சி 8-வது வார்டிற்குபட்ட வாக்குமையத்திற்கு ஹிஜாப் அணிந்து பெண் ஒருவர் வாக்களிக்க சென்றுள்ளார். அப்போது வாக்கு மையத்தில் இருந்த பாஜக முகவர் கிரிநந்தன், ஹிஜாப் அணிந்து வாக்களிக்கக்கூடாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்பத்திய நிலையில் கிரிநந்தனை கைதுசெய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Translate »
error: Content is protected !!