ஸ்மார்ட் சிட்டி ஊழல் முறைகேடு விசாரணை

ஸ்மார்ட் சிட்டி ஊழல் முறைகேடு தொடர்பாக விசாரிக்க விரைவில் குழு அமைக்கப்படும் என்று  அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை பசுமை வழிச்சாலை பகுதியில் உள்ள நீர்வழித்தடங்களில் ட்ரோன்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் கொசுக்களை அழிக்கும் வகையில், டிரோன்கள் மூலம் மருந்துகள் தெளிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக சென்னையில் 3 ஆயிரத்து 463 பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் கூறினார். ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து விசாரிக்க விரைவில் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

 

Translate »
error: Content is protected !!