உக்ரைனுக்கு போர் விமானங்களை அனுப்ப முடிவு

 

ரஷ்யாவுக்கு எதிரான போரை திறம்பட எதிர்கொள்ள, உக்ரைனுக்கு போர் விமானங்களை ஐரோப்பிய யூனியன் அனுப்பி வைக்கவுள்ளது.   சர்வதேச நாடுகள் ரஷ்யாவை தனிமைப்படுத்தியுள்ளதால், தீராத ஆத்திரத்தில் உள்ள அதிபர் புதின், அணு ஆயுத தாக்குதல் நடத்தவுள்ளதாக மிரட்டி வருகிறார். இதுதவிர இந்தியாவும் தொடர்ந்து தனது ஆதரவை ரஷ்யாவிற்கு வழங்கி வருவதால், எல்லைகளில் இந்தியர்கள் வெளியேற முடியாத நிலை காணப்படுகிறது.

இந்தநிலையில், பெரும் பேரழிவை சந்தித்து வரும் உக்ரைன் ராணுவம், போர் விமானங்களை தந்து உதவும்படி உலக நாடுகளிடம் கேட்டு வருகிறது. அதன்படி ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள வசதியாக ஐரோப்பிய யூனியன் போர் விமானங்களை அனுப்பி வைப்பதாக உறுதி தெரிவித்துள்ளது.

 

 

Translate »
error: Content is protected !!