பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி

 

சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக அம்மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில், ஆளும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என அக்கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முதலிடம் பிடிக்க, காங்கிரஸ் கட்சிக்கு 2-வது இடம் மட்டுமே கிடைத்தது.

இந்த தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ள நவ்ஜோத் சிங் சித்து, மாநில தலைவர் பதவியையும் ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Translate »
error: Content is protected !!