உத்தரகாண்ட் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி நீட்டிப்பு

உத்தரகாண்ட் மாநில முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி நீடிப்பார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில், பஞ்சாப் தவிர பிற மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது.

தேர்தல் முடிவு வெளியாகி 10 நாட்களுக்கு மேலாகியும்  உள்கட்சி பூசல் காரணமாக அம்மாநிலங்களில் முதல்வர்களை ஏற்படுத்த முடியாமல் பாஜக திணறியது.

இதனிடையே அம்மாநிலங்களுக்கென தனித்தனி பொறுப்பாளர்களை நியமித்த கட்சி தலைமை இறுதியாக நேற்று மணிப்பூரில் பிரேன் சிங்-ஐ மீண்டும் முதல்வராக நியமித்தது.

இந்தநிலையில் உத்தரகாண்டில் ஏற்கனவே முதல்வராக இருந்த புஷ்கர் சிங் தாமி படுதோல்வியை சந்தித்த போதும், அவரே அம்மாநில முதல்வராக தொடர்வார் என கட்சி தலைமை அறிவித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!