நயன்தாராவை கைது செய்ய வலியுறுத்தல்

 

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கண்ணன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ரவுடிகளை ஊக்குவிக்கும் விதமாக நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கி இருப்பதாகவும், பொதுமக்களிடையே இது ஒருவித அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால்,  ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை தடை செய்து, நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!