காட்டு தீயை உடனடியாக கட்டுப்படுத்த கோரிக்கை

 

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பற்றி எரியும் காட்டு தீயை உடனடியாக கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போடியில் இருந்து மூணாறு செல்லும் போடிமெட்டு மலைசாலையின் நான்காவது கொண்டை ஊசி வளைவிற்கு அருகேயுள்ள சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.

இதனிடையே வனத்துறை தீயை அணைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், காட்டுத்தீக்கு இடையே ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தீயை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!