அதிருப்தி தலைவர்களை சந்தித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

23 அதிருப்தி தலைவர்கள் குழுவில் இடம் பெற்றுள்ள ஆனந்த் சர்மா, மணிஷ் திவாரி மற்றும் விவேக் தங்கா ஆகியோருடன் நேற்று சோனியா காந்தி பேசியுள்ளார். அப்போது ஒரு சிலரை மட்டும் தேர்வு செய்து அவர்களை சார்ந்திருக்க வேண்டாம் என்று சோனியா காந்தியை அதிருப்தி தலைவர்கள் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் தற்போதைய சவால்களை எதிர்கொள்ள கட்சி செயல்படும் விதத்தில் மாற்றம் தேவை என்று அதிருப்தி தலைவர்கள் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை சோனியா ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிருப்தி குழுவில் இடம்பெற்றுள்ள பிற தலைவர்களையும் வரும் நாட்களில் சோனியா காந்தி சந்திப்பார் என தெரிகிறது.

Translate »
error: Content is protected !!