நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 1685 ஆக பதிவு

நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்து 685 ஆக பதிவாகியுள்ளது. ஒமிக்ரான் பரவலுக்கு பின் கடந்த சில வாரங்களாக மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. அந்தவகையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஆயிரத்து 685 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் தற்போது சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 499 ஆக பதிவாகியுள்ளது எனவும், நேற்று மட்டும் தீவிர தொற்றுக்கு 83 பேர் பலியாகிய நிலையில், கொரோனாவில் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 16 ஆயிரத்து 755 ஆக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 499 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!