மாணவர்களை கண்டித்தால் தற்கொலை செய்வதா?

சென்னை தாம்பரத்தில் தலை முடியில் கலர் ஹேர்டை அடித்து சென்ற கல்லூரி மாணவியை, கல்லூரி நிர்வாகம் கண்டித்ததால், வீடு திரும்பிய அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திரு.வி.க நகரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பல்லாவரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் அவரது தலைமுடிக்கு கலரிங் செய்தபடி கல்லூரிக்கு சென்று உள்ளார். இதனை கண்டித்த கல்லூரி நிர்வாகம் அவரது பெற்றோரை வரவழைத்து கல்லூரிக்கு இது போன்று வரக்கூடாது என கூறி கண்டித்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். படிக்கும் வயதில் தவறான வழியில் சென்றுவிடக்கூடாது என மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்தால், அதனை அவமானமாக எடுத்து தற்கொலை செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Translate »
error: Content is protected !!