எலெக்டிரிக்கல் பைக் வெடித்து தந்தை, மகள்  பலி

வேலூரில் எலெக்டிரிக்கல் பைக் திடீரென வெடித்ததால் வீட்டிலிருந்த இருசக்கர வாகனங்கள் தீப்பற்றியதில், தந்தை, மகள்  பலியாகினர்.

சின்ன அல்லாபுரம் பலராமன் தெருவில் வசிப்பவர் போட்டோகிராப்பர் துரைவர்மா. இவரது மகள் மோகன பிரீத்தி போளூர் அரசு பள்ளியில் பயின்று வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு புதிதாக எலெக்டிரிக்  ஸ்கூட்டர் ஒன்றை வாங்கிய நிலையில், அதனை இன்று விடியற்காலை வீட்டினுள் நிறுத்தி ரீசார்ஜ் செய்துள்ளனர்.

அப்போது அந்த பேட்டரி திடீரென வெடித்து சிதறியது. இதனால் அருகிலிருந்த மற்ற இரண்டு சக்கர வாகனங்களும் தீப்பற்றியது.  இந்த தீயில் துரைவர்மாவும் அவரது மகள் மோகன பிரீத்தியும் சம்பவ இடத்திலேயே தீயில் சிக்கி உடல் கருகி பலியானார்கள்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வேலூர் தெற்கு காவல்துறையினர் இரண்ட உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருததுவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!